லக்னோ,செப்.30- தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் பணி அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பணி அழுத்தம் காரணமாகத் தனது மனைவிக்கு ஐந்து பக்கத்திற்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது கடிதத்தில் பணி அழுத்தம் காரணமாகத் தான் 45 நாள்களாகத் தூங்கவில்லை, எப்போதாவது தான் சாப்பிட முடிந்தது, நான் கடுமையான மன உளைச்சலில் இருந்தேன், முடிந்தால் இலக்கை அடைந்துவிடு, இல்லையேல் வேலையை விட்டுச் சென்றுவிடு என மேலாளர்கள் மிரட்டிக்கொண்டே இருந்தார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.
தனது காப்பீட்டுத் தொகையை குடும்பத்துக்குப் பெற்றுக்கொடுக்கும்படியும், இவர்தான் என் மரணத்துக்குக் காரணம் எனத் தனது மேலாளரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். அவரது பெயரில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படியும் எழுதியிருந்தார்.
குறிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல.. உடனடி மனநல ஆலோசனைக்கு மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 அல்லது சிநேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.